Latest updateThursday, February 25th, 2021
05-Nov-2020 latest news
சென்னை நவ.05- அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அறிவிக்கப்பட்ட வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் அனைவரும் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆக்கபூர்வமான பணிகள் மூலம் திறம்பட செயல்பட்டு வரும் சட்டமன்ற தேர்தலில் சரித்திர சாதனை படைக்க வேண்டும் என வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ், அறிவுரைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அறிவிக்கப்பட்ட வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழகத்திற்க்கு உட்பட்ட ஆர்.கே., பெரம்பூர் பகுதி புதிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் இன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது
அப்போது புதிய நிர்வாகிகளுக்கு அறிவுரைகளை வழங்கி ஆர்.எஸ். ராஜேஷ், பேசிய போது..
மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்களின் நல்லாசியுடன்
மாண்புமிகு முதலமைச்சர், துணை முதலமைச்சரின் நல்லாதரவுடன் வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழகத்தில் புதிதாக பொறுப்பேற்க்கும் நிர்வாகிகள் கட்சியை பலப்படுத்த வேண்டும் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலிலை முன்னிட்டு இப்போழுதே பொதுமக்களிடம் தங்களை அடையாளப்படுத்தும் வகையில் அவர்களின் அடிப்படை பிரச்சனைகளை முன்னிறுத்தி ஆர்.கே.நகர் தொகுதி, மற்றும் பெரம்பூர் பகுதியில் இரவு பகல் என பார்க்காமல் நமது வெற்றி ஒன்றே குறிக்கோலாக நின்று திறம்பட செயல்பட்டு சரித்திர சாதனை படைக்க வேண்டும்.
இளைஞர் இளம்பெண்கள் சமுதாயம் வெற்றி பெற அவர்களை ஒன்றினைந்து பாசறை மன்றங்களை விரிவு படுத்த வேண்டும் அதற்க்கான பாக நிர்வாகிகளை கட்சியில் இணைத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் திருத்தல் பணிகளை உடனே மேற்க்கொள்ள வேண்டும்.
அதேப்போன்று தி.மு.க.வை எதிர்த்து தொகுதியில் பாகுபாடுகளை மறந்து அயராது பாடுபடும் வகையில் வெற்றி இலக்கை எட்ட வேண்டும் அறிவுரைகளை வழங்கி இறுதியாக காந்தியின் கொள்கைகளையும் அண்ணா தி.மு.க. வரலாற்றை பறைசாற்றும் வகையில் அம்மா அவர்கள் கற்றுத்தந்த பாடத்தையும் உணர்ந்து இயக்கத்தை பலப்படுத்த கட்சி பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதில் பகுதி செயலாளர்கள் ஆர்.நித்தியானந்தம், எம்.என்.சீனிவாசபாலாஜி, என்.எம்.பாஸ்கரன், வியாசை இளங்கோவன், மாவட்ட நிர்வாகிகள் இ.எஸ்.சதீஷ்பாபு, எம்.கே.எஸ். கலையரசன், கே.எஸ். வீரமருது பாண்டியன், சி.டி. சிவா, கே.என்.கோபால், ஜெஸ்டின் பிரேம்குமார்,
மணல் ஜெ.ரவிச்சந்திரன,, லயன் ஜி.குமார், பி.ஜே.பாஸ்கர், அ.வேல்முருகன், கே.எஸ். ஹரிகிருஷ்ணன், பி.கே.யுவராஜ், ஆக்கம் அகஸ்டின், கே.செல்வராணி, டேனியல் சச்சின் மணி, உள்ளிட்ட பலர் இருந்தனர்.